சூளகிரி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் பாபு வெங்கடாசலம் தலைமையில் அதிமுக கட்சியின் சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும்  ஆலோசனைக் கூட்டம் .!

கிருஷ்ணகிரி

சூளகிரி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் பாபு வெங்கடாசலம் தலைமையில் அதிமுக கட்சியின் சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும்  ஆலோசனைக் கூட்டம் .!

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், சூளகிரி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் பாபு வெங்கடாசலம் தலைமையில் அதிமுக கட்சியின் சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும்  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, 

இக்கூட்டத்துக்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாநில அம்மா பேரவை மாநில இணை செயலாளர் கலசப்பாக்கம் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தேர்தல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், சமூக ஊடகங்களை முழுமையாக பயன்படுத்தி, கட்சி கோட்பாடுகள், வளர்ச்சி பணிகள் மற்றும் பொதுமக்கள் நலத்திட்டங்களை மக்கள் மத்தியில் விரைவாக விரிவுபடுத்தும் வகையில் செயல்திட்டங்கள் குறித்து சமூக ஊடகங்களில் கட்சி தாக்கத்தை அதிகரிக்க புதிய முயற்சிகள், வீடியோ, கிராபிக்ஸ், மெம்கள் மற்றும் நேரலை (live) நிகழ்ச்சிகள் மேற்கொள்ள வேண்டியதின் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது, 

இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பூத் கமிட்டி பயிற்சியாளர்கள் சேலம் மண்டலமண்டல தகவல் தொழில் நுட்ப பிரிவு இணை செயலாளர் சதீஷ், சேலம் மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்டம் செயலாளர் பிரசன்னா, சேலம் மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட இணைச் செயலாளர் யாதவபிரபு, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீஷ், திருவண்ணாமலை மாவட்டம் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணை செயலாளர் ஆர்.சசிகுமார், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் இளஞ்சூரியன், சூளகிரி  வடக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள், பூத் கமிட்டி செயலாளர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.