கீழக்கரை வட்டாட்சியர் அலுவலக இ சேவை மையத்தில் மக்கள் அலைக்கழிப்பு.!
கீழக்கரை

கீழக்கரை தாலூகா அலுவலகத்தில் உள்ள இ சேவை மையத்தில் பணிகள் சரிவர நடப்பதில்லை எனவும் பொதுமக்கள் அலைகழிப்பு செய்வதாகவும் புகார்கள் வர தொடங்கி உள்ளது.
குடும்ப அட்டை எனும் ஸ்மார்ட் கார்டுகள் ஆன்லைனில் மனு செய்ய வேண்டும். இதற்கென பெற்றோருடன் உள்ள குடும்ப உறுப்பினரில் இருந்து நீக்கல் பெற்று தனி ஸ்மார்ட் கார்டுகென ஆன்லைனில் மனு செய்ய சென்றால் கீழக்கரை இச சேவை ஊழியர்கள் இங்கு மனு செய்ய முடியாது என்றும், வெளியில் தனியார் இசேவை மையங்களுக்கு செல்லுங்கள் என கூறுகின்றனர்.
இதனால் கீழக்கரை தாலூகா அலுவலகம் வரும் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து செல்கின்றனர். கீழக்கரை தாலூகா அலுவலகம் ஆனது பல கிராமங்களை உள்ளடக்கிய அலுவலகமாகும். இவ் அலுவலகமானது கீழக்கரை நகரில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆட்டோவில் சென்று வர ₹150/ க்கு மேலாகவும், குதக்கோட்டை போன்ற இடங்களில் இருந்து வருவதற்கு ₹500/ க்கும் மேலாக வாங்கப்படுகிறது.
இவ்வாறு பணம் செலவழித்து சென்றாலும் இ சேவை மையத்தில் உள்ள ஊழியர்களின் பொறுப்பற்ற பதிலால் கால விரயம், பண விரயம் மற்றும் மன உலைச்சலுடன் வீடு திரும்புகிறனர்.
இதுகுறித்து மனு செய்ய சென்ற ஒருவர் கூறுகையில் " முதல்நாள் அது தேவை இது தேவை என சொல்லி அனுப்பி வைத்தனர். மறுநாள் சென்றால் ஸ்மார்ட் கார்டு ஆன்லைன் மனு இங்கு பதிய வேண்டாம் என வாய்மொழி உத்தரவு வந்துள்ளதாக கூறி திருப்பி அனுப்பி விட்டனர்.
இதுகுறித்து இராமநாதபுரம் அரசு கேபிள் தாசில்தார் அவர்களிடம் புகார் அளித்தால் பொறுப்பற்ற முறையில் பதில் தருவது எங்களுக்கு மன கஷ்டத்தை ஏற்படுத்துகிறது என்றார்.
செய்தியாளர்
காதர்