அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்விற்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு 4 லட்சம் மதிப்பிலான உபகரணங்ககள்.!
வேலூர்
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்விற்கு வவிண்ணப்பித்த மாணவ மாணவிகள் 267 பேருக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான கையேடுகள் இலவசமாக வழங்கப்பட்டது.
மேலும் நாளை முதல் பயிற்சி துவங்குகிறது என ஆட்சியர் பேச்சு
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி தலைமையில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் இம்மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயிலும் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்த 267 மாணவ, மாணவிகளுக்கு நாளை முதல் நீட் தேர்வு பயிற்சியானது துவங்கவுள்ளது அத்துடன் ரூ.4 லட்சம் மதிப்பிலான நீட் தேர்வு கையேடுகள் ஒவ்வொரு மாணவ,மாணவிகளுக்கும் எரூ.1500 மதிப்புள்ளவைகளை மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி இன்று வழங்கி துவங்கி வைத்தார்.
இதில் மாணவ,மாணவிகள் பெற்றோர்கள் ஆசிரியர்களும் பங்கேற்றனர்.
இதில் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேசுகையில் தமிழக அரசு நீட் தேர்வை எழுதும் மாணவ,மாணவிகள் அரசு பள்ளியில் பயில்பவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சியை சிறப்பாக அளிக்க வேண்டுமென்ற நோக்கத்தில் இம்மாவட்டத்தில் 9 மையங்களில் நாளை முதல் பயிற்சி அளிக்கபடுகிறது பயிற்சிக்கு வரும் மாணவர்களுக்கு மதிய உணவும் தமிழக அரசு இலவ்சமாக வழங்குகிறது இந்த ஒரு மாதத்தில் நீங்கள் கடினமாக படித்து பயிற்சியில் கலந்துகொண்டால் அரசு சார்பில் வழங்கபடும் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு உங்களுக்கு கிடைக்கும் அதனை நீங்கள் பயன்படுத்தி நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம் என பேசினார்.
செய்தியாளர்
ஆர்.ஜே.சுரேஷ்