ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் விலையில்லா பாட நூல்களை பேரூராட்சி சேர்மன் வழங்கினார்.!
தென்காசி

மேலகரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் விலையில்லா பாட நூல்களை பேரூராட்சி சேர்மன் வழங்கினார்
தென்காசி ஜூன் 02
தமிழ்நாடு முதலமைச்சர் மாணவ, மாணவியர்கள் வாழ்வில் படித்து முன்னேற வேண்டும் என பல எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில்
தென்காசி மாவட்டம், மேலகரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் விலையில்லா பாட நூல்கள், சீருடைகள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மேலகரம் பேரூராட்சி மன்ற தலைவர் வேணி வீர பாண்டியன் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல்கள், மற்றும் சீருடைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜீவானந்தம், மேலகரம் பேரூர் திமுக செயலாளர் சுடலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் உமா முத்துலட்சுமி வரவேற்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள் பெமிலா, பரம லட்சுமி, லெட்சுமி, கண்ணன், அமுதா, கலைச்செல்வி, மற்றும் மாணவ, மாணவிகள், பள்ளி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்