தென்காசியில் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க 32 வது மாநாடு .!

தென்காசி

தென்காசியில் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க 32 வது மாநாடு .!

தென்காசியில் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க 32 வது மாநாடு

தென்காசி ஜூன் 22

தென்காசியில் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் 32 வது கோட்ட மாநாடு தனியார் மகாலில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கோட்ட தலைவர் முத்துகுமாரசாமி, சங்க கொடியினை ஏற்றி வைத்து மாநாட்டை துவக்கி வைத்தார். தென்காசி பழைய பேருந்து நிலையத்திலிருந்து யானைப் பாலம்  வழியாக சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட பேரணி மாநாடு நடைபெறும் மஹாலில் நிறைவடைந்தது.

அகில இந்திய காப்பீட்டு ஊழியர்கள் சங்கத் தலைவர் ரமேஷ் சிஐடியு மாநிலத் தலைவர் சௌந்தர்ராஜன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

கோட்டத் தலைவர் சுரேஷ் குமார் இணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் எல்ஐசி முதல் நிலை அதிகாரிகள் சங்க பொருளாளர் செல்வம் செந்தில் முத்து மற்றும் சண்முக சுப்பிர மணியன் ராபின்சன் குழந்தைவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.சிவசுப்பிரமணியன் தர்மலிங்கம் கருத்துரை வழங்கினார்கள்.

காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க பொதுச் செயலாளர் பொன்னையா நன்றி கூறினார்.

மாநாட்டில் அந்நிய முதலீட்டை 100% தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு உள்ள மூலதன வரம்பை குறைத்தல் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களின் பாலிசிகளை விற்க முகவரி அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன. இதில் பொதுச் செயலாளர் அறிக்கை, வரவு செலவு அறிக்கை தொகுப்புரை மற்றும் 2025-26 ஆம் ஆண்டிற்கான புதிய பொறுப்பாளர் தேர்வு நடைபெற்றது. சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் கனகராஜ் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

செய்தியாளர்

AGM கணேசன்