தென்காசியில் தேசியத் திறனாய்வு தேர்வு புத்தகங்கள் வழங்கல்.!
தென்காசி

தென்காசியில் தேசியத் திறனாய்வு தேர்வு
புத்தகங்கள் வழங்கல்
தென்காசி ஜூன் 27
தேசிய திறனாய்வு தேர்வுக்கான புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி தென்காசி சி.எம்.எஸ்.நடுநிலைபள்ளியில் நடைப் பெற்றது.விழாவிற்கு தென்காசி வட்டாரக் கல்வி அலுவலர் செல்வ பாக்கிய சாந்தினி தலைமை தாங்கினார்.
தென்காசி வட்டாரக் கல்வி அலுவலர் வசந்தி முன்னிலை வகித்தார்சி.எம்.எஸ்.பள்ளித் தலைமை ஆசிரியர் இராஜ துரை வரவேற்புரை ஆற்றினார்.தேசிய திறனாய்வு தேர்வு என்பது 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஒன்றிய அரசால் ஓவ்வொரு ஆண்டும் நடத்தப்படும்.இத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாதம் ரூ.1000 வீதம் வழங்கப்படும்.
இத் தேர்வில் அதிக மாணவர்களை வெற்றி செய்யும் வகையில் பயிற்சி வகுப்பும் புத்தகங்களும் வழங்கப்பட்டு
வருகிறது.இத் தேர்வுக்கான புத்தகங்களை கடையம ஆர்.வி. நல்லபெருமாள் அறக்கட்டளை வழங்கியது. புத்தகங்களை கடையம் வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன் பெற்று வழங்கினார்.
பொன்னம்பலம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சண்முக குமார் நன்றி கூறினார்.விழாவில் தென்காசி வட்டாரத்தில் உள்ள அனைத்து நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்