திமுக பொதுக்கூட்டத்தில் பிளஸ் டூ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி கார்த்திகாவிற்கு பாராட்டு.!
தென்காசி

இலத்தூர் திமுக பொதுக்கூட்டத்தில் பிளஸ் டூ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி கார்த்திகாவிற்கு பாராட்டு
தென்காசி மே 13,
தென்காசி மாவட்டம் இலத்தூரில் செங்கோட்டை ஒன்றிய திமுக சார்பில் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் ஆக்ஸ்போர்ட் பள்ளியில் பனிரெண்டாவது வகுப்பில் கல்வி பயின்ற மாணவி கார்த்திகா தென்காசி மாவட்டத்தில் 595 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.
அவருக்கு இந்த பொதுக் கூட்டத்தில் சிறப்பான பாராட்டு நடைபெற்றது.
செங்கோட்டை ஒன்றிய செயலாளரும் புதூர் பேரூராட்சி மன்ற தலைவருமான ரவிசங்கர் பொன்னாடை அணிவித்து, கேடயம் மற்றும் உதவி தொகை வழங்கி வெகுவாக பாராட்டினார்.
திமுக மாவட்ட அவை தலைவர் சுந்தர மகாலிங்கம் ரூபாய் 5000 ரொக்க பரிசினை வழங்கி பாராட்டினார். திமுக மாநில விவசாய அணி இணைச் செயலாளர் அப்துல் காதர் மாணவியை பாராட்டி கல்லூரியில் முதல் ஆண்டிற்கான கல்வி செலவினை ஏற்றுக் கொள்வதாக பொதுக் கூட்டத்தில் தெரிவித்தார்.
மாணவியின் குடும்பத்தினர் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். திமுக மாநில விவசாய அணி இணைச் செயலாளர் அப்துல் காதரின் இச் செயலினை கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஊர்பொதுமக்கள் அனைவரும் வெகுவாக பாராட்டினர்.
இந் நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, ஆறுமுகச்சாமி, ஷேக் தாவூது, மாவட்ட திமுக துணைச் செயலாளர் கனிமொழி, பொதுக்குழு உறுப்பினர் சாமித்துரை, மாவட்ட பொருளாளர் ஷெரிப், ஒன்றிய துணை செயலாளர் வாசுதேவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்