பிரத்தியங்கிரா தேவி கோவிலில் மிளகாய் வத்தல் யாகம்.!
ஒசூர்

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஓசூர் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி கோவிலில் மிளகாய் வத்தல் யாகம் நடத்தி பக்தர்கள் வழிபாடு.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராகு ஸ்ரீ கேது அதர்வண ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு இன்று மிளகாய் வத்தல் யாகம் நடத்தி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
ஒசூர் ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு ராகு கேது ப்ரீத்திக்காக மிளகாய் வத்தல் யாகம் செய்து வழிபடுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு இந்த கோவிலில் மிளகாய் வத்தல் யாகம் நடைபெற்றது.
இதில் பக்தர்கள் அகண்ட யாகத்தில் வேள்வித்தீயை வளர்த்து ஒவ்வொருவரும் மிளகாய் வத்தலை எடுத்து தங்கள் தலையை இடமும் பூரணமாக சுற்றி திருஷ்டியை கழிக்கும் வண்ணமாக யாக குண்டத்தில் போட்டு நேர்த்தி கடன்களை செலுத்தி வழிபாடு மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து மூலவரான அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டு மங்கள ஆரத்தி காண்பிக்கப்பட்டன.
இதில் தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.
செய்தியாளர்
மாருதி மனோ