இலத்தூரில் திமுக 4 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்டம்.!
தென்காசி

இலத்தூரில் திமுக
4 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்டம்
தென்காசி மே 13
தென்காசி மாவட்டம் இலத்தூர் ரேஷன் கடை அருகில் செங்கோட்டை ஒன்றிய திமுக சார்பில் நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடை பெற்றது. இந் நிகழ்ச்சிக்கு செங்கோட்டை ஒன்றிய செயலாளரும் புதூர் பேரூராட்சி மன்ற தலைவருமான ரவிசங்கர் தலைமை வகித்தார்.
தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை ஆறுமுகசாமி மாவட்ட அவைத் தலைவர் சுந்தர மகாலிங்கம் பொதுக்குழு உறுப்பினர் சாமித்துரை ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் பரமசிவன் மாவட்ட அயலக அணி முத்துராமலிங்கம் மாவட்ட மகளிர் தொண்டரணி சமூக வலைதள பொறுப்பாளர் சோபனாராணி ஒன்றிய அவைத் தலைவர் கட்டாரி பாண்டியன் ஒன்றிய துணைச் செயலாளர்கள் ஜான்சன் சீதாலட்சுமி பொருளாளர் பழனிச்சாமி மாவட்ட பிரதிநிதி தம்பி துரை சாகுல் ஹமீது சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிளைக் கழக செயலாளர் சாமி தேவர் வரவேற்புரை ஆற்றினார். ஒன்றிய துணை செயலாளர் வாசுதேவன் தொகுப்புரை வழங்கினார். தலைமை கழக பேச்சாளர் சிலம்பை டென்னிசன் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் நவ்ஷாத் ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.
இதில் பிளஸ் டூ தேர்வில் 595 மதிப்பெண் பெற்று தென்காசி மாவட்டத்தில் முதல் இடம் பிடித்த இலத்தூர் மாணவி கார்த்திகாவிற்கு பொன்னாடை போர்த்தி கேடயம் மற்றும் உதவி தொகையினை ஒன்றிய செயலாளர் ரவிசங்கர் மற்றும் மாவட்ட அவைத் தலைவர் சுந்தர மகாலிங்கம் ஆகியோர் வழங்கி கௌரவித்தனர்.திமுக மாநில விவசாய அணி இணைச் செயலாளர் அப்துல் காதர் வானவிய பாராட்டி கல்லூரியில் முதல் ஆண்டிற்கான கல்விச் செலவினை ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஜேசு ராஜன் ஷேக் தாவூது பொருளாளர் ஷெரிப் மாவட்ட துணைச் செயலாளர்கள் தமிழ்ச்செல்வன் கனிமொழி பொதுக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி
உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிளைச் செயலாளர் பாபுகுமார் நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்