புதுச்சேரியில் பொங்கல் பொருட்கள் வழங்கப்படுமா?

புதுச்சேரி

புதுச்சேரியில் பொங்கல் பொருட்கள் வழங்கப்படுமா?

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் பொருட்களாக பச்சரிசி மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

இதற்கான டோக்கன்கள் பயனாளர்களுக்கு இன்று முதல் வழங்கப்பட தொடங்கியுள்ள நிலையில்,

புதுச்சேரியில் பொங்கல் பொருட்கள் வழங்கப்படுமா? என்ற கேள்வி பொதுமக்களில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில், தொகுப்புகளை வழங்க கால அவகாசம் குறைவாக உள்ளதால், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக ரொக்கமாக பணம் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டும், ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புக்கு பதிலாக ரூ.500-ஐ நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பரிந்துரை ஆளுநரின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.