உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று இனிப்புகள் வழங்கி கொண்டாடிய தவெக. !
விருதுநகர்

வஃபு திருத்த மசோதா தீர்ப்பை வரவேற்று த.வெ.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.!
விருதுநகர் மத்திய மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழக்கில் வக்ஃபு சொத்துக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது மற்றும் வாக்கு நிர்வாகத்தில் புதிய உறுப்பினர்களை நியமிக்க கூடாது என இடைக்கால தடை உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது
இந்த இடைகால உத்தரவினை வரவேற்று கொண்டாடும் வகையில் விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் P சின்னப்பர் ஆலோசனைப்படி அருப்புக்கோட்டையில் நகர் பகுதியில் இன்று இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
செய்தியாளர்
அன்சாரி