ஆலங்குளம் யூனியனில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்டிட பணி ஆணையினை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் வழங்கினார்.!
தென்காசி

ஆலங்குளம் யூனியனில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்டிட பணி ஆணையினை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் வழங்கினார்
தென்காசி ஏப்ரல் 21
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் யூனியனில் 562 நபர்களுக்கு ரூ23.50 கோடியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்டிட பணி ஆணையை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர்
கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் வழங்கினார்.
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வைத்து முன்னாள் முதல்வர் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் 562 பயனாளிகளுக்கு புதிய வீடு மற்றும் பழைய வீடு பழுது பார்க்கும் பணிக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ கே கமல் கிஷோர் தலைமை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ராணி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் தாயம்மாள் வரவேற்புரை ஆற்றினார்.
இதில் சிறப்பு விருந்தினராக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர்
கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பங்கேற்று 562 பயனாளிகளுக்கு ரூ 23.50 கோடி மதிப்பில் புதிய வீடு கட்டிடவும் பழுதடைந்த வீடுகளை புதுப்பிக்கவும் பணி ஆணையினை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அரசு ஒப்பந்ததாரர் மணிகண்டன், யூனியன் மேலாளர் சுல்தான், துணைத் தலைவர் செல்வ கொடி ராஜாமணி, கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் ராஜன், ஒன்றிய செயலாளர்கள் செல்லத்துரை, அன்பழகன்,தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் ராமசுப்பிர மணியன் மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் கல்யாண ராமசுப்பிர மணியன் நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்