அரசு பொதுத் தேர்வில் சிகரம் தொட்ட சாதனையாளர்களுக்கு தென்காசியில் பாராட்டு விழா..!
தென்காசி

அரசு பொதுத் தேர்வில் சிகரம் தொட்ட சாதனையாளர்களுக்கு தென்காசியில் பாராட்டு விழா.
தென்காசி, ஜூன் 14
10 மற்றும் 12 ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில்
பள்ளி அளவில் முதல் மூன்று இடம் பிடித்த அரசு. அரசு உதவி பெறும், தனியார் மற்றும் சிபிஎஸ்சி பள்ளி மாணவர்களுக்கு தென்காசி வி டி எஸ் ஆர் சில்க்ஸ் ,மெடி அகடமி, தென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் ஐ. ஏ. எஸ் அகடமி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ரெடி கல்வி மையம் இணைந்து பாராட்டு விழாவினை தென்காசி வி டி எஸ் ஆர் மஹாலில் வைத்து நடைபெற்றது. இவ்விழாவிற்கு வி டி எஸ் ஆர் சில்க்ஸ் உரிமையாளர் இம்ரான்கான் தலைமை தாங்கினார்.
TAF IAS அகடமி நிர்வாக இயக்குநர் மாரியப்பன்,
ரெடி கல்வி மைய நிறுவனர் முனைவர் வில்சன் அருள் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பணி நிறைவு மாவட்டக்கல்வி அலுவலர் சுடலை வரவேற்றார்
மெடி அகடமி நிர்வாக இயக்குநர் முனைவர் சுரேஷ் ஜான் கென்னடி உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தார்
மாவட்டக் கல்வி அலுவலர் கண்ணன் அனைவருக்கும் பாராட்டுச் சான்று வழங்கி வாழ்த்தினார்.
120 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து வெற்றி பெற்ற 520 மாணவர்களுக்கு
முதன்மைக்கல்வி அலுவலர் ரெஜினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தென்காசி Toppers என்றபரிசினையும்,
பள்ளிகளுக்கு கேடயமும் வழங்கி , இது சாதனையின் முதல்படி தான். உங்கள் முயற்சி தொடரவும் உயர் கல்வியில் கனவு மெய்ப்படவும் வாழ்த்தினார்.
பணி நிறைவு அலுவலர் பெருமாள் பாராட்டுரை வழங்கினார். சீவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திவான் பக்கீர் ஏற்புரை வழங்கினார். தலைமை ஆசிரியர்கள் ரவி, அருள் பிரதீப் , கண்ணன், செய்யது குலாம் அன்பியா, சிக்கந்தர் , ராஜேஸ்வரி, உட்பட பெற்றோர்கள் , ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விழாவில் நடுப்பேட்டை பள்ளி வாசல் அசரத் அமானுல்லா, செயலாளர் மீரான் உசேன், புஷ்பவள்ளி, ரதி, குற்றால கணபதி, ஆனந்த ஜோதி, ராஜ்குமார், இசாக் , தம்பிராஜ், செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இலஞ்சி ராமசுவாமி பிள்ளை பள்ளி ஆசிரியர் சுரேஷ் குமார் தொகுத்து வழங்கினார்.
நூலகர் ராஜா நன்றி கூறினார். விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வி டி எஸ் ஆர் சில்க்ஸ் உரிமையாளர் ரகுமான்கான் செய்திருந்தார்.
செய்தியாளர்
AGM கணேசன்