சங்கரன் கோவிலில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் முகாம்.!

தென்காசி

சங்கரன் கோவிலில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் முகாம்.!

சங்கரன் கோவிலில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது

தென்காசி மே 06


தமிழ்நாடு மின்  பகிர்மான கழகத்தின், தென்காசி மாவட்டத்தில், சங்கரன்கோவில் கோட்டத்தின் மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் முகாம் சங்கரன் கோவிலில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்திற்கு திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை  பொறியாளர் அகிலாண்டேஸ்வரி கலந்துகொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க  செயற்பொறியாளர் சங்கரன்கோவில் கோட்டம், பாலசுப்ரமணியம்,  மற்றும் ஏனைய அலுவலர்களுக்கும்  உத்தரவிட்டார்.

இந்நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து  மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.

மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் முகாம் முடிந்தவுடன் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் மேற்பார்வை  பொறியாளர் அகிலாண்டேஸ்வரி  பேசும் போது  இயற்கை இடர் பாடுகளால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டால்  சங்கரன்கோவில் கோட்ட பொறியாளர்கள் ஒருங்கிணைந்து பணிகளை போர்க்கால அடிப்படையில் சரி செய்து மீண்டும் உடனடியாக மின் விநியோகம் வழங்க வேண்டும் என உத்திரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து 110 / 11 கி.வோ. மலையன்குளம் உபமின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார் .

செய்தியாளர்

AGM கணேசன்