இந்தியா, பாகிஸ்தான் போர் நடந்தே தீரும் ஸ்ரீமுனியப்பன் கோவிலில் அருள் வாக்கு கூறிய மாதேஷ் அகோரி.! பொதுமக்கள் அச்சம்.!

கிருஷ்ணகிரி

இந்தியா, பாகிஸ்தான் போர் நடந்தே தீரும் ஸ்ரீமுனியப்பன் கோவிலில் அருள் வாக்கு கூறிய மாதேஷ் அகோரி.! பொதுமக்கள் அச்சம்.!

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள  காளிங்கவரம் ஸ்ரீ முனியப்பன்  திருக்கோவில்  நிகழ்வில் மாதேஷ் அகோரி இந்தியா, பாகிஸ்தான் போர் நடந்தே தீரும் என அருள் வாக்கு தெரிவித்துள்ளது மக்கள் மத்தியில் வியப்பினை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள காளிங்கவரம் என்ற கிராமத்தில் ஸ்ரீ முனியப்பன் திருக்கோவில் உள்ளது.

இந்த திருக்கோவிலில் கடந்த ஆண்டு குடமுழுக்கு நடைபெற்ற விழாவினைத் தொடர்ந்து பக்தர்களுக்கு மற்றும் நாட்டில் நடைபெறக்கூடிய  சம்பவங்கள் குறித்து ரமேஷ் அகோரி அருள் வாக்கு சொல்லி உள்ளார்.

அப்போது நாட்டின் பல்வேறு இடங்களில் மழை, மற்றும் பூகம்பத்தினால் அழியக்கூடும் எனவும்  குறிப்பாக ஆந்திரா மாநிலத்தில் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்து மழையால் பல கிராமங்கள் தண்ணீரில் முழ்கிவிடும், டெல்லியில் ஒரு சில மாவட்டங்களில் பாம்புகள் அதிகமாகும், இதன் மூலம் அதிக அளவில் உயிர் சேதம் அதிகரிக்கும் என்றும், 2025-ல் கண்டிப்பாக இந்தியாவில் மிகப்பெரிய அளவில் போர் நடக்கும் என அப்போதை கணித்து கூறி உள்ள சம்பவம் மாவட்ட மக்களிடையே பெரும் வியப்பினை ஏற்படுத்தி உள்ளது.

ரமேஷ் அகோரி சாமியார் சென்னப்படி தற்போது  இந்தியா பாகிஸ்தான் போர் ஒத்திகை நடத்தப்பட்டு வருவது என்பது குறிப்படதக்கது.

செய்தியாளர்

மாருதி மனோ