தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற் குழு கூட்டம்.!
தென்காசி

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற் குழு கூட்டம்
மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் பங்கேற்பு
தென்காசி மே 07
தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மதுரை ரோட்டில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயம், மாவட்ட திமுக அலுவலகத்தில் வைத்து முன்னாள் மாவட்ட அவை தலைவர் முத்துப் பாண்டி தலைமையில் நேற்று நடைபெற்றது.இந் நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் வரவேற்புரை ஆற்றினார்.
இதில் மாவட்ட துணை செயலாளர் கனிமொழி, கென்னடி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, ஷேக் தாவுது, ஆறுமுகசாமி,, பொதுக்குழு உறுப்பினர்கள் ரஹீம், சமுத்திர பாண்டியன், கதிர்வேல் முருகன் ரவிச்சந்திரன், சாமிதுரை, ஒன்றிய செயலாளர்கள் சிவன் பாண்டியன் செல்லதுரை திவான் ஒலி அன்பழகன் சீனித்துரை ஜெயக்குமார் ரவிசங்கர் நகர செயலாளர் வெங்கடேசன் பேரூர் செயலாளர்கள் சுடலை குட்டி முத்தையா பண்டாரம் மாணவரணி மாவட்ட அமைப்பாளர் ரமேஷ் விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் முருகன் தொண்டரணி இசக்கி பாண்டியன் அழகு தமிழ் சங்கர் இளைஞர் அணி ஐவேந்திரன் தினேஷ் அயலக அணி ராமராஜ் வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எட்டாம் தேதி முதல் 11ம் தேதி வரை நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு, என்ற தலைப்பில் 11 ஒன்றியங்கள் நாலு நகரங்கள் உள்ளிட்ட 15 இடங்களில் சாதனை விளக்க பொதுக் கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. முடிவில் ரமேஷ் அனைவருக்கும் நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்