5.30 லட்சம் நிதியில் குடிநீர் பைப் லைன் பணி துவக்க விழா.!

தென்காசி

5.30 லட்சம் நிதியில் குடிநீர் பைப் லைன் பணி துவக்க விழா.!

கீழக் கலங்கலில் ரூ 5.30 லட்சம் நிதியில் குடிநீர் பைப் லைன் பணி துவக்க விழா

சிவபத்மநாதன் துவக்கி வைத்தார்

தென்காசி மே 22

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் 1வது வார்டு கவுன்சிலரும் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய துணை  தலைவருமான செல்வக் கொடி ராஜா மணி  கவுன்சிலர் நிதியிலிருந்து கீழக் கலங்கலில் குடிநீர் வசதிக்காக பைப் லைன் அமைக்கும் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூபாய் 5.30 லட்சம் நிதிக்கான பணி தொடங்கு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் செல்வகக்கொடி ராஜாமணி  தலைமை வகித்தார்.

ஒன்றிய கவுன்சிலர்கள் பால சரஸ்வதி முருகையா, வள்ளியம்மாள் முருகேசன் ,பழனி என்ற பால் துரை, முத்தம்மாள்புரம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர் பி முருகன்,  ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்லச் சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர் வரவேற்று பேசினார்.

இந்தநிகழ்ச்சியில் கலந்து கொண்டு திட்டப் பணியை திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சிவ பத்மநாதன்  தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஊத்துமலை தங்கதுரை செல்லத்துரை எல் எஸ் கண்ணையா கார்த்திக் முத்து, ராக்கெட் மகன் கோல்டன் ராஜா, கோஸ் பாண்டியன், அருணா பாண்டியன், மனோஜ் இளைஞர் அணி அசோக் காதர் மைதீன் அசார் கருப்பசாமி கிளைக் கழகச் செயலாளர் மகேந்திரன் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் முடிவில் ஊராட்சி உறுப்பினர் கணேஷ்வரி நன்றி கூறினார்.

செய்தியாளர்

AGM கணேசன்