தென்காசி மாவட்ட சைவ வேளாளர் சங்க 3ம் ஆண்டு திருமண வரன் அறிமுக மாநாடு நாளை நடை பெறுகிறது .!
தென்காசி

தென்காசி மாவட்ட சைவ வேளாளர் சங்க 3ம் ஆண்டு திருமண வரன் அறிமுக மாநாடு நாளை நடை பெறுகிறது
தென்காசி அக் 11
தென்காசி மாவட்ட சைவ வேளாளர் சங்கம் சார்பில் மூன்றாம் ஆண்டு திருமண வரன் அறிமுக மாநாடு நாளை தென்காசி சௌந்தர்யா மஹாலில் வைத்து நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் நாராயணன் தலைமை வகிக்கிறார்.
ஓய்வு பெற்ற நீதிபதி சடாட்ஷர சுந்தரம், லோகநாயகி மற்றும் பண்ணை சொக்கலிங்கம், மனோன்மணி ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைக்கின்றனர். துணைத் தலைவர் செண்பகம், மாவட்ட செயலாளர் நாகராஜன், கொள்கை பரப்பு செயலாளர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
தென்காசி மாவட்ட அமைப்பு செயலாளர் ஐயம்பெருமாள் வரவேற்புரை ஆற்றுகிறார். நிர்வாகத் தலைவர் வழக்கறிஞர் கனகசபாபதி, மாவட்ட துணை தலைவர்கள் சிவஞானம்,சிவசங்கர், துணைச் செயலாளர் லட்சுமணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
சடாட்ஷர சுந்தரம், சொக்கலிங்கம் ஆகியோர் ஆசியுரை வழங்குகின்றனர்.
மாவட்ட அமைப்பு செயலாளர் ஐயம் பெருமாள், மாணிக்கம், லட்சுமணன், பேச்சி முத்து சங்கர், திருமலை, பெரியநாயகம், அருணாசலம் என்ற பாபு ஆகியோர் திருமண தகவல் பதிவுகளை நிர்வகிக்கும் பொறுப்பாளர்களாக செயல்படுகின்றனர்.
முதல் ஆண்டு திருமண தகவல் மாநாட்டில் பதிவு செய்யப்பட்ட 671 வரன்களின் பட்டியலில், 188 திருமணங்களும், 2ம் ஆண்டு 450 வரன்கள் பட்டியலில் 115 திருமணங்களும் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தென்காசி மாவட்ட சைவ வேளாளர் சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
செய்தியாளர்
AGM கணேசன்