குற்றாலம் அருவிக்கரையில் மழைக்கால ஓவியம் வரைந்த மாணவர்களுக்கு பாராட்டு.!

தென்காசி

குற்றாலம் அருவிக்கரையில் மழைக்கால ஓவியம் வரைந்த மாணவர்களுக்கு பாராட்டு.!

குற்றாலம் அருவிக்கரையில் மழைக்கால ஓவியம் வரைந்த மாணவர்களுக்கு பாராட்டு.!

குற்றாலம் மே- 27

குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழும் சூழலில் சிவராம் கலைக்கூட மாணவர்களும் , ஆர். பி. ஓவியக்கழக மாணவர்களும் முப்பது பேர் இணைந்து  குற்றால அருவியை உயிரோட்டமாக அருவிக்கரையில் இருந்து வரைந்தனர். தொடர்ந்து மழை பெய்தாலும் குடைபிடித்துக் கொண்டும், மழையில் நனைந்து கொண்டும் , அருள்மிகு குற்றால நாதர் கோவில் வளாகத்தில் இருந்தும் வரைந்து மகிழ்ந்தனர். விரைவில் பள்ளி திறக்க இருக்கும் சூழலில் இது ஒரு புதிய அனுபவமாக இருந்ததாக இளம் ஓவியர்கள் கூறினர்.

இவ் ஓவியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பாராட்டு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு குற்றால நாதர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் முனைவர் சக்தி முருகேசன் தலைமை தாங்கினார். உறுப்பினர்கள் வீரபாண்டியன், சுந்தரராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியர் கருப்பசாமி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக குற்றாலம் வனச்சரக அலுவலர் சீத்தாராமன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
இலஞ்சி ஆர்.பி. மேல்நிலைப் பள்ளி செயலாளர்  ஐ.சி. சண்முகவேலாயுதம் படம் வரைதலை துவக்கி வைத்தார்
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலர் சுரேஷ் குமார் ஒருங்கிணைத்தார். நிகழ்வில்  திருச்செல்வி, அணு, வினோதா, பார்வதி, ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மகாராஜன், ராஜேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர். ஓவிய ஆசிரியர் கணேசன் நன்றி கூறினார்.

செய்தியாளர் 

AGM கணேசன்