பிரானூர் பார்டரில் திமுக 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்.!

தென்காசி

பிரானூர் பார்டரில் திமுக 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்.!

பிரானூர் பார்டரில் திமுக 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

தென்காசி மே 12

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள பிரானூர் பார்டரில் தென்காசி தெற்கு மாவட்ட மேற்கு ஒன்றிய திமுக சார்பில் நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் இது பல்லாண்டு என்னும் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் திவான் ஒலி தலைமை வகித்தார். தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஷேக் அப்துல்லா, கலைஞர் தமிழ் சங்க புரவலர் மலிகா கதிரவன் தலைமை செயற்குழு உறுப்பினர் ஷேக் தாவூது மாவட்ட பொருளாளர் ஷெரிப் பொதுக்குழு உறுப்பினர் தமிழ்ச் செல்வி பண்பொழி பேரூர் செயலாளர் ராஜராஜன் பிரானூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆவுடையம்மாள் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் வினோதினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கிளை கழக செயலாளர் ராமையா வரவேற்புரை ஆற்றினார். தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லதுரை, தலைமை செயற்குழு உறுப்பினர் இலத்தூர் ஆறுமுகச்சாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் இசக்கி பாண்டியன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். மாநில பேச்சாளர்கள் சிலம்பை டென்னிசன், சாகுல் ஹமீது கான் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் நவ்ஷாத்ஆகியோர் நான்காண்டு சாதனைகளை விளக்கி கூறினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட திமுக பிரதிநிதி ஆர்கே செல்வம் மேலகரம் பேருர் துணை சேர்மன்ஜீவானந்தம் ஒன்றிய துணை செயலாளர் முத்துக்குமார் கிளைச் செயலாளர் முருகேசன் வழக்கறிஞர் ரகுமான் சாதத் மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி மல்லிகா கலாநிதி வேல்சாமி ஈஸ்வரி ராஜா சிவன் பாண்டியன் முருகேசன் கருப்பசாமி சரவணன் பரமசிவன் இஸ்மாயில் மாரிதுரை ஜஹாங்கீர் காளிதாசன் தங்கமணி மாரியப்பன் மணிகண்டன் ஹபிப் நிஷா முகமது இப்ராஹிம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் இதில் கலந்து கொண்டனர். முடிவில் பிரானூர் ஒன்றிய பிரதிநிதி வடிவேல் முருகன் நன்றி கூறினார்.

செய்தியாளர்

AGM கணேசன்