தென்காசியில்  சுற்றுச்சூழல் அணி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.!

தென்காசி

தென்காசியில்  சுற்றுச்சூழல் அணி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.!

தென்காசியில்  சுற்றுச்சூழல் அணி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தென்காசி மே 12

தென்காசி தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தெற்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் வைத்து இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை வகித்து பேசும்போது, மண்டல கூட்டம் நடத்துவது பற்றியும், கழக வளர்ச்சியில் நம் பங்கு கட்டாயம் இருக்க வேண்டும் என வலியுறுத்தியும் சுற்றுச்சூழல் அணியின் சார்பில் தலைமை கழக அனுமதி பெற்று குற்றாலத்தில் மண்டல கூட்டம் ஜூன் மாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்.

மாவட்ட துணை தலைவர் மல்லிகா முன்னிலை வகித்தார்.

மாநில சுற்றுச்சூழல் அணி இணை செயலாளர் மருத்துவர் சஃபி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு  சிறப்புரை ஆற்றினார். சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் பொன் அறிவழகன் வரவேற்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜே கே ரமேஷ், மாவட்ட பிரதிநிதி பொன் செல்வன், நகர செயலாளர் வெங்கடேசன், தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் திவான் ஒலி, அறங்காவலர்கள் கணேசன் வீரபாண்டியன், அலுவலகம் மேலாளர் ராமராஜ் ஐவேந்திரன் திருநாவுக்கரசு, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராஜன் மாவட்ட அயலக அணி தலைவர் நசீர், துணை அமைப்பாளர்கள் உதய சூரியன் இசக்கி துரை சமுத்திர பாண்டி சேகனா ஈஸ்வரன் சுப்பிரமணியன், மணிகண்டன் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் அப்துல் காதர் நன்றி கூறினார்.

செய்தியாளர்

AGM கணேசன்