தென்காசி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 94.70% பேர் தேர்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 94.70% பேர் தேர்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

தென்காசி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில்  94.70% பேர் தேர்ச்சி 

மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

தென்காசி, மே - 10

தென்காசி மாவட்டத்தில் 2024 - 25 கல்வி ஆண்டிற்கான பிளஸ் 2 தேர்வில் 94.70%  பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர்  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

 2024 25 ஆம் ஆண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொது தேர்வு முடிவுகள் நேற்று அரசு தேர்வுகள் இயக்ககத்தால் வெளியிடப்பட்டன. 

அதன்படி தென்காசி மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வினை 16468 பேர் எழுதினார்கள்.  இவர்களில் 7628 மாணவர்களும் 8,840 மாணவிகளும் அடங்குவர். இந்த தேர்வை எழுதியவர்களில் 15596 பேர் தேர்ச்சி பெற்றனர்.தேர்ச்சி பெற்றவர்களில் 7029 மாணவர்களும், 8,567 மாணவிகளும் அடங்குவர். அதன்படி ஒட்டு மொத்த தேர்ச்சி சதவிகிதம் 94.70 ஆகும் தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட 151 மேல்நிலைப் பள்ளிகளில் 58 பள்ளிகளில்  100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதன்படி தென்காசி மாவட்டத்தில் உள்ள 54 அரசு பள்ளிகளில் 7474 பேர் தேர்வு எழுதினார்கள். அதில் 6832 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 91.41% ஆகும். தென்காசி மாவட்டத்தில் உள்ள 42 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 5838 பேர் தேர்வு எழுதினார்கள் இதில் 5639 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் இது 96.59 சதவிகிதம் ஆகும். தென்காசி மாவட்டத்தில் உள்ள 55 சுயநிதி பள்ளிகளில் 3156 பேர் தேர்வு எழுதிய நிலையில் 3,125 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் இது 99.02 சதவீதம் ஆகும்.

தென்காசி மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்று சிறப்பிடம் பெற்றுள்ள மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

செய்தியாளர்

AGM கணேசன்