அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை வைக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு..!

தென்காசி

அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை வைக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு..!

கீழப்பாவூர் பேரூராட்சியில் மே - 15 க்குள் அனைத்து கடைகளிலும்  தமிழில் பெயர் பலகை - வைக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு.!

தென்காசி, மே - 02

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பேரூராட்சி பகுதியில் வரும் 15.05.2025 க்குள்  தமிழக அரசின் உத்தரவுப்படி அனைத்து கடைகள் மற்றும் அனைத்து வணிக நிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகை வைப்பது கட்டாயம் என்பதை வலியுறுத்தி கடைகள் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது.

தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு தொழிலாளர் நலன்  திறன் மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் உத்தரவுப்படி அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு
உட்பட்ட அனைத்து வகையான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் போன்றவற்றின் பெயர் பலகைகளில் நிறுவனத்தின் பெயர் பலகை தமிழில் தான் முதலில் இடம் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கீழப்பாவூர் அனைத்து வணிக நிறுவன பிரதிநிதிகள் மற்றும் கடை
உரிமையாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற கூட்ட அரங்கில் வைத்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன் தலைமை வகித்தார், செயல் அலுவலர் மாணிக்கராஜ் முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் கீழப்பாவூர் பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து கடைகள் வணிக வர்த்தக நிறுவனங்களில் பெயர் பலகையில் தமிழ் மொழிக்கான இடம் ஆங்கில மொழிக்கான இடம் மற்றும் பிற மொழிக்கான இடமானது 5:3:2 என்று விகிதத்தில் இருத்தல் வேண்டும் எனவும் தமிழில் பெயர் பலகை வைக்க மே 1 முதல் 15ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப் பட்டுள்ளது. அதன் பின்னர் ஆய்வு மேற்கொள்ளும்
போது பிறமொழி பெயர் பலகை உள்ள கடைகளுக்கு ரூபாய் 2000/- அபராதம் விதிக்கப்படும் என்ற விபரமும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள். வணிக பிரதிநிதிகள், கீழப்பாவூர் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட கடை சங்க உரிமையாளர்கள் சங்கரநாராயணன், ஆனந்தவிஜயன், சங்கரன்,கணேசன், ராமசாமி, முத்துராஜா. ஆவுடையப்பன், இசக்கிமுத்து, பொன்னுத்தாய், இசக்கியம்மாள். மதியழகன், சண்முகசுந்தரம், மணிகண்டன், மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனார்.

தென்காசி தொழிலாளர் நல உதவி ஆய்வாளர் ராஜேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முடிவில் கீழப்பாவூர் பேரூராட்சியின் செயல் அலுவலர் மாணிக்கராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.

செய்தியாளர்

AGM கணேசன்