நெல்லையில் டிஎன்பிஎல் 9வது சீசன் ஜூன் 21ல் தொடக்கம்.!

தென்காசி

நெல்லையில் டிஎன்பிஎல் 9வது சீசன் ஜூன் 21ல் தொடக்கம்.!

நெல்லையில் டிஎன்பிஎல் 9வது சீசன் ஜூன் 21ல் தொடக்கம்

தென்காசி மே 30

தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டிகள் நெல்லையில் ஜூன் 21 ல் தொடங்குகிறது. இது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க உதவி செயலாளர் பாபா, தமிழ்நாடு பிரீமியர் லீக் தலைவர் பாலகிருஷ்ணா, தலைமை செயல் அலுவலர் பிரசன்ன கண்ணன் ஆகியோர் நெல்லையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டிகளின் 9வது சீசன் வருகிற ஜூன் 5ஆம் தேதி தொடங்குகிறது இந்த ஆண்டு கோவை சேலம் நெல்லை திண்டுக்கல் ஆகிய நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெறுகிறது  

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் ஜூன் 5ஆம் தேதி  துவங்குகின்றன ஜூன் 13 முதல் சேலம் கிரீக் பவுண்டேஷன் மைதானத்திலும் ஜூன் 21 முதல் 26 வரை நெல்லையில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மைதானத்திலும் போட்டிகள் நடைபெறுகிறது.

எஞ்சிய போட்டிகள் மற்றும் ப்ளே ஆப் சுற்றுகள் திண்டுக்கல் என் பி ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் திண்டுக்கல் டிராகன்ஸ் கோவை கிங்ஸ் திருப்பூர் தமிழன்ஸ் நெல்லை ராயல் கிங்ஸ் சேலம் ஸ்பார்டன்ஸ் மதுரை பேந்தர்ஸ் திருச்சி கிராண்ட் சேலாஸ் ஆகிய எட்டு அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றனர்.

ஜூலை 1 முதல் தகுதிச்சுற்று போட்டியும் 2ம் தேதி வெளியேற்றும் சுற்றுப்போட்டியும் 4ம் தேதி 2வது தகுதி சுற்றுப்போட்டியும் நடைபெறுகிறது.

இறுதிப் போட்டி ஜூலை 6ஆம் தேதி திண்டுக்கல் நடைபெறுகிறது இந்த சீசனில் ஆறு இரட்டை ஆட்டங்கள் நடைபெறுகிறது இரட்டை ஆட்டங்கள் நடக்கும் நாட்களில் முதல் போட்டி மாலை 3 மணிக்கு துவங்கும் மின்னொளி போட்டிகள் இரவு 7 மணிக்கு துவங்கும் என அவர்கள் தெரிவித்தனர்.

செய்தியாளர்

AGM கணேசன்