நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு முடித்த மாணாக்கர்களுக்கு கல்லூரி கனவு நிகழ்ச்சி.!

தென்காசி

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு முடித்த மாணாக்கர்களுக்கு கல்லூரி கனவு நிகழ்ச்சி.!

சங்கரன்கோவிலில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு முடித்த மாணாக்கர்களுக்கு கல்லூரி கனவு நிகழ்ச்சி

மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

தென்காசி மே 22

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணாக்கர்களுக்கு உயர்கல்வி பயில கல்லூரி கனவு 2025 எனும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி இரண்டாம் கட்டமாக சங்கரன் கோவில் ஏவிகே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ கே கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி கனவு கையேட்டினை மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தேர்வு எழுதிவிட்டு மேற்கொண்டு என்ன படிக்கலாம் எந்த துறையை தேர்ந்தெடுக்கலாம் என ஒவ்வொரு மாணவர்களும் தங்களுடைய எதிர்காலத்தை தேர்வு செய்ய வேண்டிய தருணம் இது. பள்ளி கல்வியை முடித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள் முதலில் உயர்கல்வியில் என்னென்ன துறைகள் இருக்கிறது,

அதில் என்னென்ன பட்டப்படிப்புகள் இருக்கிறது, இதில் நமக்கு விருப்பமான பட்டப்படிப்பு எது என்று தெரிந்து கொள்ள வேண்டும். பெற்றோர்களும் மாணவர்களும் இணைந்து பிடித்த ஈடுபாடு உள்ள துறையிலான படிப்பை தேர்வு செய்வது அவசியம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் கோட்டாட்சியர் கவிதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள், மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்