மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எரிவாயு முகவர்கள் குறைத்தீர்க்கும் கூட்டம்.!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற எரிவாயு முகவர்கள் குறைத்தீர்க்கும் கூட்டத்தில் வணிக நிறுவனங்களில் முறைக்கேடாக பயன்படுத்திய சமையல் எரிவாயு சிலிண்டர்களை பறிமுதல் செய்த குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளர் திலகா அவர்களுக்கு டாக்டர் சந்திரமோகன் பாராட்டு
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் உத்தரவின் பெயரில் மாவட்ட அளவில் எரிவாயு மற்றும் நுகர்வோர்களின் மாதந்திர குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது,
மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா ராணி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் கோபிநாத், அலுவலக கண்காணிப்பாளர் தங்கப்பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
மேலும் இக்கூட்டத்திற்கு சமூக நுகர்வோர் பாதுகாப்பு நல சங்கத்தின் மாநில பொதுச்செயலாளரும், முன்னாள் அரசு பொது விநியோகத் திட்ட ஆலோசனை குழு உறுப்பினருமான டாக்டர் சந்திரமோகன் கலந்து கொண்டு பேசும்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எரிவாயு முகவர்களின் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள் ஆகியோரின் ஏற்பாட்டில் மாதந்தோறும் சிறப்பாக நடைபெறுகிறது,
இதில் குறிப்பாக வணிக நிறுவனங்களில் முறைகேடாக பயன்படுத்தி வந்த வீட்டுஉபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் பயன்பாட்டை தடுத்த மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளர் திலகா மற்றும் தலைமை காவலர் நாகரத்தினம் ஆகியோரின் சிறப்பான பணியை வெகுவாகப் பாராட்டினார்.
மேலும் குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்ட பறக்கும் படை தனி வருவாய் ஆய்வாளர் சுரேஷ் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களுக்கு எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப் போக்கினை கடைப்பிடித்து வரும் இவர் மீது துறை வாரியாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,
வீடுகளுக்கு சிலிண்டர்கள் விநியோகம் செய்யும் தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படுகிறதா என கிருஷ்ணகிரி மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் கண்காணித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து
பேசினார்,
கூட்டத்தில் நுகர்வோர் சங்க மாநில துணைத்தலைவர் பிரகாஷ், மாநில இணைச்செயலாளர் செல்ல பிரகாஷ், சிறுபான்மை நுகர்வோர் சங்கத் தலைவர் டேனியல் சக்கரவர்த்தி, நுகர்வோர் சங்க தலைவி பிரேமலதா மற்றும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள், பணி வட்டாட்சியர்கள், அனைத்து எரிவாயு முகவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மனுவைப் பெற்ற மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா ராணி அவர்கள் பெறப்பட்ட மனு மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
செய்தியாளர்
மாருதி மனோ