கல்வராயன் மலைப்பகுதியில் கஞ்சா செடி வளர்த்த ஆசாமிகளை பிடித்த போலீஸ்.! கஞ்சா செடிகள் அழிப்பு 104 கிலோ கஞ்சா பறிமுதல்.!

கள்ளக்குறிச்சி

கல்வராயன் மலைப்பகுதியில் கஞ்சா செடி வளர்த்த ஆசாமிகளை பிடித்த போலீஸ்.! கஞ்சா செடிகள் அழிப்பு 104 கிலோ கஞ்சா பறிமுதல்.!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அருகே களக்காடு பகுதியில் விவசாய நிலத்தில் கஞ்சா செடிகள் வளர்த்து விற்பனை செய்யப்படுவதாக கரியலூர் காவல் நிலைய போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

தகவலின் பேரில் கச்சிராயபாளையம் காவல் ஆய்வாளர் ஏழுமலை, கரியலூர் காவல் உதவி ஆய்வாளர் ஜெகதீசன், சிறப்புப் பிரிவு உதவி ஆய்வாளர் பிரபு மற்றும் போலீஸார் களக்காடு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது களக்காடு எல்லைக்கு உட்பட்ட பெருமாநத்தம் சோலைமலை மலை உச்சியில் அதே ஊரை சேர்ந்த பர்வதம், கோவிந்தன் ஆகியோர் கஞ்சா செடிகளை வளர்த்து வந்ததை கண்டுபிடித்து 104 கிலோ கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து பர்வதம், கோவிந்தன் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். இதனிடையே அங்கிருந்து தப்பியோடிய குமரன் மற்றும் ஜெகநாதன் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

தற்போது கல்வராயன் மலையில் பல இடங்களில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

மேலும் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஒரே இடத்தில் கஞ்சா செடிகள் வளர்ந்துள்ளதை கண்டுபிடித்து அழித்துள்ளனர்.

வனத்துறையினர் தொடர் ஆய்வு மேற்கொண்டு கஞ்சா செடிகள் வளர்ப்பதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.