காங்கிரஸ் வழக்கறிஞர்பிரிவு சார்பில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்ச்சி.!
தென்காசி

காங்கிரஸ் வழக்கறிஞர்பிரிவு சார்பில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்ச்சி
தென்காசி ஏப்ரல் 14
தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு சார்பில் டாக்டர் அம்பேத்கர் 135 வது பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ் சி எஸ் டி பிரிவு துணைத் தலைவரும், தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு தலைவருமான
வழக்கறிஞர் காசி பாண்டியன் தலைமை வகித்து தென்காசி மாவட்டம் நன்னகரத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு தலைவர் வழக்கறிஞர் ஐயப்பன், சங்கரன்கோவில் சட்டமன்ற காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு தலைவர் வழக்கறிஞர் மாரி ராஜ், தென்காசி வட்டார காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் முருகேசன், முன்னாள் ராணுவ வீரர் மற்றும் சமூக ஆர்வலர் எஸ் சண்முகம், சமூக ஆர்வலர் மற்றும் செய்தியாளர் ஆனந்த், ஆகியோர் கலந்து கொண்டு அம்பேத்கரின் சமத்துவம் சமூக நீதி மற்றும் கல்வி மீது வைத்த நம்பிக்கைகள் குறித்து உரையாற்றி அவரது விடுதலை சிந்தனைகளை மக்களிடம் எடுத்துரைத்தனர்.
மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் வழக்கறிஞர் காசிபாண்டியன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கனேசன்