இலஞ்சியில் திமுக இளைஞரணி சார்பில் நீர் மோர் பந்தல்.!
தென்காசி

இலஞ்சியில் திமுக இளைஞரணி சார்பில் நீர் மோர் பந்தல்
மாவட்ட செயலாளர் ஜெயபாலன், டாக்டர் கலை கதிரவன் பங்கேற்பு
தென்காசி மே 01
தென்காசி தெற்கு மாவட்டம் இலஞ்சி பேரூர் திமுக இளைஞரணி சார்பில் நீர் மோர் பந்தல் நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் நீர் மோர் மற்றும் தண்ணீர் பழங்கள் வழங்கி தொடங்கி வைத்தார். இந் நிகழ்ச்சிக்கு
தென்காசி சட்டமன்றத்தொகுதி பொறுப்பாளர் டாக்டர் கலை கதிரவன், தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம் இலஞ்சி பேரூர் திமுக செயலாளர் முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டி.ஆர் கிருஷ்ணராஜா, இலஞ்சி குமாரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பூவையா, இளைஞரணிதுணை அமைப்பாளர் சுப்பிர மணியன், குற்றாலம் அறங்காவலர் குழு உறுப்பினர் சுந்தரராஜன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் குமார், மாவட்ட பிரதிநிதி ஜெயக்குமார் பாண்டியன், ஐடி விங் தேவி, வார்டு செயலாளர்கள் சிவகுமார், செல்லப்பா, பூதத்தான், காளிராஜ், இசக்கி, சண்முகநாதன், மருதாச்சலம், இலஞ்சி
பேரூர் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, யோகேஷ், பாலகிருஷ்ணன், சண்முகம் உள்ளிட்ட
நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை இலஞ்சி பேரூர் திமுக இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக் சிறப்பாக செய்திருந்தார்.
செய்தியாளர்
AGM கணேசன்