திருநங்கைகளை தாய்போல் காத்த திருவாரூர் கிழக்கு என திருநங்கைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா.!
செங்கல்பட்டு

திருநங்கைகளை தாய்போல் காத்த திருவாரூர் கிழக்கு என திருநங்கைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா!
சென்னை தெற்கு மாவட்டம் தி.மு.க. சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் 102 வது பிறந்த நாள் அசத்தி காட்டிய ச.அரவிந்த்ரமேஷ் எம்.எல்.ஏ.!
சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி முத்தமிழறிஞர் கலைஞர் 102து பிறந்த நாளை முன்னிட்டு திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும் மத்திய பகுதி செயலாளருமான ச. அரவிந்த்ரமேஷ் தலைமையிலும், 14 வது மண்டல் குழுத் தலைவரும் மேற்கு பகுதி செயலாளருமான எஸ்.வி. ரவிச்சந்திரன்,15 வது மண்டல குழுத் தலைவரும் சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி செயலாளருன வி.இ.மதியழகன் மற்றும் புனித தோமையார்மலை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ஜி வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் சென்னை சோழிங்கநல்லூர் கைலாஷ் கார்டனில் பிரம்மாண்டமான முறையில் மாலை 5.மணியளவில் தொடங்கப்.பட்டு எழுச்சியுடன் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வரவேற்புரை சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ச.அரவிந்த் ரமேஷ் நிகழ்த்த. நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன்,நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சரும் தி.மு.க முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு மற்றும் வணிக வரி மற்றும் பத்திரப் பதிவு துறை அமைச்சருமான பி.மூர்த்தி மற்றும் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கு கலைஞர் செய்த சாதனைகளையும் இன்றைய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்த மற்றும் செய்துக் கொண்டிருக்கிற சாதனைகளையும் பட்டியலிட்டு திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் க.கணபதி,சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட இளைஞரணி செயலாளருமான ஏ எம் வி பிரபாகர்ராஜா,தலைமை செயற்குழு உறுப்பினரும் பெருநகர சென்னை மாநகராட்சி துணைமேயர் மு.மகேஷ் குமார்,தலைமை செயற்குழு உறுப்பினர் பாலவாக்கம் க.சோமு,
மாவட்ட துணை செயலாளர்கள்
பாலவாக்கம் த.விசுவநாதன் பாலவாக்கம் மு.மனோகரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.கே ஏழுமலை, மேடவாக்கம் ப. ரவி,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜே.எழில் பாண்டியன்
மாவட்ட விவசாய அணி அமைப்பாளரும் வேங்கை வாசல் ஊராட்சி மன்றத் தலைவருமான வி.ஜெயச்சந்திரன் பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் முருகேசன்,ஜே.கே. மணிகண்டன், க.ஏகாம்பரம், தமிழரசி சோமு,ஷெர்லிதாமஸ் ஜெய்,ஷர்மிளா தேவி திவாகர், சமீனா செல்வம், விமலா கருணா மற்றும் திரளான கழகத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்
சுகுமாரன்