வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்த கும்பல் கைது. 1300 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் .!
சென்னை

கண்ணகி நகரில் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்த கும்பல் கைது. 1300 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்.
மும்பையில் இருந்து வாங்கி சென்னையில் விற்று வந்ததாக வாக்குமூலம்.
சென்னை கண்ணகி நகரில் இளைஞர்கள் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தி வருவதாக தொடர் புகார் வந்தது,
இதனையடுத்து, கண்ணகி நகர் காவல் ஆய்வாளர் நட்ராஜ் தலைமையிலான காவல் குழுவினர் கண்ணகி நகர் பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்ட போது, வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்த போது இளைஞரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் கண்ணகி நகரை சேர்ந்த அருண்(எ) ஆடு அருண்(33), என்பதும் இவர் மீது கொலை வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. அவரது வீட்டில் சோதனை செய்து பார்த்த போது 1300 வலி நிவாரணி மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
கண்ணகி நகரை சேர்ந்த பிரேம்குமார்(எ)பாய்(23), மற்றும் பிரகாஷ்(எ) கட்ட கோபி(26), என்பவர்கள் மூலம் மும்பையில் இருந்து வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி வந்து போதைக்காக அதிக விலைக்கு கண்ணகி நகர் பகுதியில் விற்று வந்துள்ளனர்.
மூவரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்து சோழிங்கநல்லூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர்
S S K