அரைஸ் அண்ட் ஷைன் அறக்கட்டளை ராகம் தொலைக்காட்சி தேசிய நுகர்வோர் மக்கள் பாதுகாக்க லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு குழு சார்பாக ஏழை, எளிய குடும்பங்களுக்கு பொருளுதவி.!

ஊட்டி

நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று 26 4 25 சனிக்கிழமை காலை அரைஸ் அண்ட் ஷைன் அறக்கட்டளை ராகம் தொலைக்காட்சி தேசிய நுகர்வோர் மக்கள் பாதுகாக்க லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு குழு சார்பாக நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும்  ஏழை எளியோருக்கான சுமார் 70 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திட்டக்குழு உறுப்பினரும் நகராட்சி உறுப்பினருமான கே ஏ முஸ்தபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்வில் தேசிய நுகர்வோர் மக்கள் பாதுகாப்பு லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு தலைவர் டி ஆர் ஓ ஜேசுராஜ் அனைவரையும் வரவேற்றார்.

லஞ்ச ஒழிப்புத் துறை துணைத் தலைவர் நில அளவை செட்டில்மெண்ட் அலுவலர் வி கே பிரபு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வித்யா சசிகுமாரை வரவேற்றனர்.

மேலும் துணைத் தலைவர் ஜெயபிரகாஷ் அழகர் மலை அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

மாவட்ட பொருளாளர் ஆசிர்வாள், செயல் தலைவர் சன் ஜெரால்ட் ஆகியோர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு தலைவருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.

பின்னர் ஜான்சி ராணி அனைவரையும் வாழ்த்தி நன்றி கூறினார

நிகழ்ச்சிக்கு வந்திருந்த மக்கள் அனைவருக்கும் மாற்றுத்திறனாளிகள் தலைவர் ஐயரின் ஸ்டெல்லா அனைவருக்கும் தேநீர் விருந்து கொடுத்து உபசரித்தார்.

சிறப்பு விருந்தினர் பிரியா, வித்யா சசிகுமார் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது இதுதான் முதல் முறை என சந்தோஷப்பட்டனர்.

ஒரு குடும்பத்திற்கு தலா 700 ரூபாய் வீதம் பொருட்கள் வழங்கப்பட்டன. 

ஜான்சி ராணி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் வாழ்த்தி நன்றி கூறி நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

செய்தியாளர்

ஜாம்பவான் ஜெரால்டு