தென்காசி மாவட்டத்தில் மே 1ஆம் தேதி கிராம சபை கூட்டம் .!

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் மே 1ஆம் தேதி கிராம சபை கூட்டம் .!

தென்காசி மாவட்டத்தில் மே 1ஆம் தேதி கிராம சபை கூட்டம் 

மாவட்ட ஆட்சியர் தகவல்

தென்காசி ஏப்ரல் 26

தென்காசி மாவட்டத்தில் தொழிலாளர் தினமான மே 1ஆம் தேதி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஏ கே கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
 இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு ஊராட்சிகள் கூட்டம் 1994 பிரிவு 3 மற்றும் சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குனர் கடிதம் 
16 4 2025 படி தொழிலாளர் தினமான 1 5 2025 அன்று காலை 11 மணிக்கு தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

கிராம சபை கூட்டத்தில் கூட்ட பொருள்களாக கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல் இணைய வழி மனை பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல் சுயசான்றிணை அடிப்படையாகக் கொண்டு கட்டிட அனுமதி பெறுதல் வரி மற்றும் வரி இல்லா வருவாய் இனங்களை இணைய வழி செலுத்துவதை உறுதிப்படுத்துதல் மற்றும் இதர பொருள்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தினை கண்காணிக்க மாவட்ட அளவிலான உதவி இயக்குனர் நிலை அலுவலர்கள் மற்றும் வருவாய் வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் கிராம சபை கூட்டங்களில் கிராம ஊராட்சிகளின் அனைத்து பொதுமக்களும் கலந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தியாளர்

AGM கணேசன்