அகமதாபாத் விமான விபத்து தென்காசி பழனி நாடார் எம் எல் ஏ இரங்கல் .!

தென்காசி

அகமதாபாத் விமான விபத்து தென்காசி பழனி நாடார் எம் எல் ஏ இரங்கல் .!

அகமதாபாத் விமான விபத்து

தென்காசி பழனி நாடார் எம் எல் ஏ இரங்கல்

தென்காசி ஜூன் 13

அகமதாபாத்தில் நேற்று நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தென்காசி சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவருமான எஸ். பழனி நாடார் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானம் குஜராத்தின் மேகானி என்ற பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும், தென்காசி மாவட்ட காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்வதாகவும் மேலும் சிகிச்சையில் இருப்பவர்கள் விரைவில் பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்

AGM கணேசன்