தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே உள்ள காளிக்கோவிலில் நடைபெற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை சீரழிக்கும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஆந்திரா மாநில எல்லைப்பகுதியில் அமைந்துள்ள காளிக்கோவில் என்ற இடத்தில் ஜூலை 5 ஆம் தேதி நடைபெற உள்ள உழவர் தின பேரணியை முன்னிட்டு தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட துணைத்தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்திற்கு மகளிர் அணித் தலைவர் திருமதி பெருமா, இளைஞர் அணி செயலாளர் அனுமந்தராசு, திருமூர்த்தி உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளாக கலந்துக் கொண்ட தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராம கவுண்டர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து சிறப்புரை ஆற்றினர்.
மேலும் இக்கூட்டத்தின் போது வருகின்ற ஜுலை - 5 ஆம் தேதி கிருஷ்ணகிரியில் நடைபெற உள்ள உழவர் பேரணியில் ஆயிரகணக்கான விவசாயிகள் கலந்துக் கொள்வது, காளிக்கோவில் பகுதியில் முகமிட்டு உள்ள 12 யானைகளால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை கேள்விக்குறியாக்கிய யானைக்கூட்டத்தினை ஆந்திரா வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும், காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்குவதோடு காட்டு பன்றிகளை சுட்டு கொல்ல உரிய அனுமதி அளிக்கப்பட வேண்டும்.
கலைஞர் ஆட்சியின் போது விவசாயிகளுக்கு வழங்கபட்ட நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும், காளிக்கோவில் பகுதியில் முறையாக செல்போன் சிக்னல் கிடைக்காதால் ரேசன் கடைகளில் முறையாக ரேசன் பொருள்கள் கிடைக்க வழி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் தமிழக விவசாய சங்சத்தினை சேர்ந்த காதார் பாஷா, பிரபு, அமாசி, வேலு, சுப்பிரமணி, ராஜா, லட்சுமணன், சம்பத், முனியப்பன், சத்தி வேல் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ