ஜச்சா பீ  தர்காவில் 19-ம் ஆண்டு மொகரம் விழாவினையொட்டி சந்தனக்குடம் ஊர்வலத்துடன் கொடியேற்று விழா .!

கிருஷ்ணகிரி

ஜச்சா பீ  தர்காவில் 19-ம் ஆண்டு மொகரம் விழாவினையொட்டி சந்தனக்குடம் ஊர்வலத்துடன் கொடியேற்று விழா .!

கிருஷ்ணகிரி அருகே உள்ள தின்னக்கழனி கிராமத்தில் அமைத்துள்ள ஜச்சா பீ  தர்காவில் 19-ம் ஆண்டு மொகரம் விழாவினையொட்டி சந்தனக்குடம் ஊர்வலத்துடன் கொடியேற்று விழா நடைபெற்றது, இதில் சாதிமத பாகுபாடு இன்றி ஏராளமானவர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

கிருஷ்ணகிரி ஒன்றியம்,  பெத்ததாளப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட தின்னக்கழனி கிராமத்தில்  அமைந்துள்ள ஜச்சா பீ தர்க்காவில் 19-ம் ஆண்டு மொகரம் திருவிழா கொடி ஏற்றத்துடன் வெகு விமர்ச்சியாக துவங்கியது.

இதன் முன்னதாக கிருஷ்ணகிரி தர்கா கமிட்டி தலைவர் நவாப் சங்கல் தோப்பு தர்காவில் உள்ள மஸ்தாணி அம்மா, பாபு ஷா ஆகியோரின் தலைமையில் சந்தனகுடம் மற்றும் கொடி மேளத்தாளத்துடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது,

இந்த ஊர்வலமானது தின்னக்கழனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகள் வழியாக சென்று மீண்டும் தர்காவை வந்தடைத்தது, இதனையடுத்து கொடிக்கு சந்தனம் பூசியும் வாசன திரவியங்களும் தெளிக்கப்பட்டது,

பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த கொடி மரத்தில் கொடி ஏற்றிவைத்து ஹஸ்ரத் காஜா அமீனுல்லா ஷா  முன்னிலையில்  சிறப்பு பாத்தியாவும் நடைபெற்றது.

இந்த மொகரம் திருவிழாவில் கிருஷ்ணகிரி மட்டுமின்றி தின்னக்கழனி மற்றும் அதனை சுற்றியுள்ள உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சாதி மத வேறுபாடுகளை களைந்து ஏராளமானவர்கள் கலந்துகொண்டு  நாட்டில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் நலமுடன் வாழவேண்டி பிராத்தனை மேற்கொண்டு வழிபட்டனர்.

மேலும் இந்த விழாவின் போது நடராஜன், ரபீக், ஜலாலி, மாலிக் சாஹிப், ஜாபர்  உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ