வண்டலூர் பூங்காவில் இன்று நடந்த நிகழ்வில் அமைச்சர் பெயரை பூங்கா நிர்வாகம் ராஜா கண்ணப்பன் என பிழையோடு அச்சிட்டு பேனர் வைத்ததால் பெரும் பரபரப்பு .!
சென்னை

வண்டலூர் பூங்காவில் இன்று நடந்த நிகழ்வில் அமைச்சர் பெயரை பூங்கா நிர்வாகம் ராஜா கண்ணப்பன் என பிழையோடு அச்சிட்டு பேனர் வைத்துள்ளது.
ராஜ கண்ணப்பன் என்பதை ராஜா கண்ணப்பன் என பேனரில் இருந்தது.
சென்னை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், தாய்லாந்தின் லாம்பாங் பகுதியில் உள்ள யானைப் பாதுகாப்பு மையத்தில் 2025 ஜூன் 17 முதல் 21 வரை யானை பராமரிப்பு பயிற்சி பெற்ற 15 பேர் நபர்களுடன் யானைப்பாகன்கள் மற்றும் யானைப் பாகன் உதவியாளர்களை இன்று வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வில் கலந்து கொண்டு, பயிற்சி
அனுபவங்களை, யானைப்பாகன்கள் மற்றும் யானைப் பாகன் உதவியாளர்கள், வனச்சரக அலுவர்கள் மற்றும் வனஉயிரின மருத்துவர் தங்களது பயிற்சி அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.
அமைச்சர் இந்த
பயிற்சியால் பெறப்பட்ட
அனுபவங்களால், முதுமலை மற்றும் ஆனைமலையில் உள்ள யானைகள் முகாம்களில், பணிபுரிபவர்களுக்கு உதவக்கூடியதாக இருக்கும் என்றார். கடந்த இரண்டு ஆண்டுகளில் இது தாய்லாந்தில் நடத்தப்பட்ட இரண்டாவது பயிற்சி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பயிற்சிகள் முகாம்களில் உள்ள யானைகளின் நலம் மற்றும் ஆரோக்கியத்துக்கு மிகவும் பயனளிக்கும் வகையில் உள்ளதாக கூறினார்.
இதனை நிகழ்ச்சி முடியும் யாரும் வரை கவனிக்கவும் இல்லை, அதனை மறைக்கவும் இல்லை நிகழ்ச்சியும் முடிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அமைச்சர் பெயர் கூடாத சரியாக தெரியாத ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ், என நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் புலம்பல்.
செய்தியாளர்
S S K