சவுதியில் மரணித்தவர் உடலை மீட்டு தாயகம் அனுப்பிய தமுமுக .!

தமுமுக

சவுதியில் மரணித்தவர் உடலை மீட்டு தாயகம் அனுப்பிய தமுமுக .!

சவுதியில் மரணித்தவர் உடலை மீட்டு தாயகம் அனுப்பிய தமுமுக .!

தஞ்சாவூர் மாவட்டத்தை  சேர்ந்த ஒரத்தநாட்டில் வசித்து வந்த தமிழ்செல்வன் (43) என்பவர் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு சவுதி அரேபியா தமாம் நகரில்,கம்பெனி  டிரைவராக பணிபுரிந்து வந்த நிலையில்,
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

அவரின் உடலை மீட்டு தாயகம் அனுப்பி வைக்க அவரின் உறவினர்கள் சவுதி அரேபியா  இந்தியன் வெல்பர் ஃபார்ம் இந்திய நல்வாழ்வு மையம் நிர்வாகிகள் ,காரைக்கால் தஜ்மல் தீன், பீர்முகமது ஆகியோரை  தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டதன் பெயரில்,உடனடியாக மருத்துவமனை சென்ற IWF நிர்வாகிகள், உரிய ஆவணங்களை சமர்பித்து,  உடலை மீட்டு  திருச்சி விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

விமான நிலையத்தில் திருச்சி கிழக்கு  தமுமுக மமக மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா அவர்களின் தலைமையிலான  திருச்சி கிழக்கு மாவட்ட தமுமுக நிர்வாகிகள் உடலை பெற்றுக்கொண்டு குடும்பத்தினர் ஒப்படைத்தனர். 

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi (MR)