தவற விட்ட பொருட்களை தனிப்படை அமைத்து கண்டுபிடித்து கொடுத்த காவல் ஆய்வாளர்

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சங்கீதா,27/ 10 / 2024 அன்று திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டு இராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம் வரும்பொழுது அவர் கையில் வைத்திருந்த மணிப்பர்ஸ், ஏடிஎம் கார்டு, ஓட்டர் ஐடி, இன்சூரன்ஸ் கார்டு, கோல்டு லோன் ரிசிப்ட் ஆகியவற்றை தவற விட்டார் சங்கீதா.
இதனையடுத்த காணாமல் போன போன பொருட்களை கண்டுபிடித்து தருமாறு இராமநாதபுரம் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் சங்கீதா.
சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் இராமநாதபுரம் நகர் காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான தனிப்படை உடனடியாக சிசிடிவியை கண்காணித்து காணாமல் போன அனைத்து பொருட்களையும் கண்டுபிடித்து சங்கீதாவிடம் ஒப்படைத்தனர்.
காணாமல் போன பொருட்களை பெற்றுக் கொண்ட சங்கீதா காவல் ஆய்வாளர் மற்றும் தனிப்படை காவல் துறையினருக்கு நன்றியை தெரிவித்து கொண்டு பொருட்களை பெற்று சென்றார்.
காதர்