தஞ்சாவூர் மாவட்டத்தில் வாடகைதாரர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு.!

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் வாடகைதாரர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு.!

கருத்து கேட்பு கூட்டத்தில் வாடகைக்கு குடியிருக்கும் குடியிருப்பு வாசிகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு.!

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திருப்பாலைத்துறை அருள்மிகு பாலைவனநாதர் சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான மனைகளில் குடியிருப்பவர்களுக்கு திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் நியாய வாடகை நிர்ணயிக்கப்பட்டு அது தொடர்பாக ஆட்சேபனை கோரி சம்பந்தப்பட்ட வாடகை தாரர்களுக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டது.

சம்பந்தப்பட்ட வாடகைதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட நியாய வாடகை அதிகமாக இருப்பதாகவும் அவ்வளவு தொகையை தங்களால் கட்ட இயல முடியாது என்றும் திருக்கோயில் அலுவலகத்தில் தங்களது ஆட்சேபனையை தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து வாடகைதாரர்கள் குடியிருப்பு வாசிகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் முன்னாள் கவுன்சிலர் ஜார்ஜ், ரசீது, பாலாஜி முன்னாள் ராணுவ வீரர் ஸ்ரீதரன் உட்பட பலரும் நிகழ்வில் இருந்தனர்.

மேலும் தொடர்புடைய செயல் அலுவலர் விக்னேஷ் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பாபநாசம் இன்பம்