அய்யம்பேட்டையில் வேங்கட ரமண பாகவத சுவாமிகள் இசை விழா.!
தஞ்சாவூர்

அய்யம்பேட்டையில் வேங்கட ரமண பாகவத சுவாமிகள் இசை விழா மத்திய அரசு மூத்த வழக்கறிஞர் துவங்கி வைத்தார்.
திருவையாறு தியாகராஜ சுவாமிகளின் பிரதம சீடரான வேங்கடரமண பாகவதரின் 244 - வது ஜெயந்தி இசை விழா
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அய்யம்பேட்டையில் நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க விழா அய்யம்பேட்டை சங்கீத மகாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேங்கடரமண பாகவத சுவாமிகள் ஜெயந்தி கமிட்டி தலைவர் என்.எம்.ஆர். மோகன் தலைமை தாங்கினார். ஜெயந்தி கமிட்டி புரவலரும், தொழிலதிபதிருமான ராயா ஜி.சீனிவாசன், துணை தலைவர் குப்பண்ணாச்சாரி, அய்யம்பேட்டை சௌராஷ்டிரா சபா தலைவர் சௌந்தரராஜன், ஜெயந்தி கமிட்டி செயலாளர் வெங்கட்ரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜெயந்தி கமிட்டி பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் மத்திய அரசின் மூத்த வக்கீல் பி.ஆர்.கோபிநாதன் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சிகளை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இதில் அ.தி.மு.க. பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் துரை.சண்முகபிரபு, ஜெயந்தி கமிட்டி நிர்வாகிகள், இசை கலைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஜெயந்தி கமிட்டி பொதுச்செயலாளர் பி.ஆர். அனந்தராமன் நன்றி கூறினார். முன்னதாகவேங்கட ரமண பாகவத சுவாமிகளின் எழுந்தருள செய்து, அவர் பயன்படுத்திய தம்புரா, பதாகைகள், அவரால் எழுதப்பட்ட ஒலைச் சுவடிகளுடன் ஊர்வலம் நடந்தது.
தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இன்று இரவுடன் இசை நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது. நாளை மாலை விடையாற்றி உற்சவம் நடக்கிறது.
செய்தியாளர்
பாபநாசம் இன்பம்