விவசாயிகள் மீதான கடன்களை ரத்து செய்யக் கோரியும், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும் வேல்முருகன் உரை .!
தஞ்சாவூர்

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில்
விவசாய பொருட்களுக்கு கட்டுப்படியான விலை வழங்கக் கோரியும், ஒன்றிய,மாநில அரசுகளின் விவசாய விரோத சட்டங்களை எதிர்த்தும், விவசாயிகளை கடன் சுமையிலிருந்து விடுவிக்கக் கோரியும் தஞ்சையில் நடைபெற்ற விவசாயிகள் கடன் விடுதலை மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்.
உரையில் விவசாயிகள் இல்லையேல் நாம் இல்லை எனவும், விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலையை வழங்கிடக் கோரியும் உரையாற்றினார்.
மேலும் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை நசுக்கும் விதமாக விவசாயிகளுக்கு எதிராக சட்டங்களை இயற்றியுள்ளனர். இந்த விவசாயிகள் மீதான விரோத சட்டங்களை நீக்க வேண்டும் எனவும் கூறினார்.
அதே போல் தாங்கள் விளைவித்தப் பொருட்களுக்கு சரியான ஆதார விலை கிடைக்காததால் விவசாயிகள் தங்கள் நிலத்தின் மீதும், உடமைகளின் மீதும் கடன் பெற்று அதை திரும்ப செலுத்த முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். பலர் கடனை கட்ட முடியாமல் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
ஆகவே மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் உயிரைக் காகக்கவும், விவசாயிகள் தாங்கள் விளைவித்தப் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டியும், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை நீக்க வேண்டியும் கூட்டத்தில் உரையாற்றினார் வேல் முருகன்.
கூட்டத்தில் தஞ்சை மாவட்ட விவசாயிகள்,விவசாய சங்க நிர்வாகிகள், தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi (MR)
விளம்பர தொடர்புக்கு
97 87 41 64 86