ஆளுநர் ஆர்.என். ரவி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.! ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ.!

தஞ்சாவூர்

ஆளுநர் ஆர்.என். ரவி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.! ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ.!
ஜவாஹிருல்லா

சட்டமன்ற மரபுகளை மதிக்காமல்
தமிழக மக்களை அவமதிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை.!

2025 ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டசபையில் உரையாற்ற அழைக்கப்பட்ட ஆளுநர் ஆர்.என் ரவி கடந்த ஆண்டைப் போல் இந்தாண்டும் உரை நிகழ்த்தாமல் வெளிநடப்பு செய்துள்ளார்.

தமிழக சட்டமன்ற நெடிய வரலாற்றில் , சட்டசபை நிகழ்வின்  தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்தும் கூட்டத்தின் முடிவில் நாட்டுபண் பாடப்பட்டு நிறைவு செய்யப்பட்டு வருகின்றது.

இந்த மரபுகளை நன்கு தெரிந்த ஆளுநர் ஆர்.என் ரவி தனது மனம்போன போக்கில் மரபுகளுக்கு எதிராக இன்று மீண்டும் உரையை வாசிக்காமல் இரண்டாம் தடவையாக வெளிநடப்பு செய்து தமிழ்நாடு சட்டமன்றத்தையும் தமிழக மக்களையும் அவமதித்துள்ளார்.

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு.

என்ற குறளுக்கு இலக்கணமாக இன்றைய நமது திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகின்றது.

பசியும் பிணியும் பகையுமற்ற நாடு தான் சிறந்த நாடு என திருக்குறள் போதிக்கின்றது.

இன்று நமது அரசின் சீர்மிகு திட்டமான முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளை தொடர்ந்து இன்று  3995 அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளுக்கு விரிவுப்படுத்தப்பட்டு இன்று 17.53 இலட்சம் பள்ளி குழந்தைகள் பயனடைகின்றனர்.

அதேப்போல் மருத்துவ கட்டமைப்பில் 36 அரசு மருத்துவ கல்லூரி, 299 அரசு பொது மருத்துவமனைகள், 2286 அரசு சுகாதார நிலையங்கள், 8713 துணை சுகாதார நிலையங்கள் என மக்களின் துயர் நீக்கும் மருத்துவசேவை பணியில் தமிழகம் இந்தியாவின் மருத்துவ தலைநகர விளங்கின்றது.

சுகாதாரம் கல்வி தொழில் முன்னேற்றம் வேலை வாய்ப்புகளில் இன்று தன்னிறைவுப் பெற்ற மாநிலமாக, அனைவரையும் ஒருங்கிணைந்த வளர்ச்சியில் தமிழகம் வேகமாக முன்னேறி வருகின்றது.

ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்க வேண்டிய 2152 கோடி ரூபாயை தராமல் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசு இழுத்தடிக்கின்றது.

இதன் விளைவாக தமிழகத்தின் 44 இலட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகியுள்ளது.

இதுப்போன்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு தேவையான நிதித்தேவைகளை பெற்று தருவதற்கு முயற்சி எடுக்காத ஆளுநர் ஆர்.என் ரவி , பிரச்சனைகளை திசைத்திருப்ப மீண்டும் மீண்டும் நாட்டு பண் விவகாரத்தை முன்னெடுப்பது சட்டமன்ற மரபுகளையும், தமிழக மக்களின் உணர்வுகளை களங்கபடுத்தும் செயலாகும்.

தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் மன்றத்தின் மாண்பை சீர்குலைக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை குடியரசு தலைவர் தலையிட்டு அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

ஆளுநரின் செயல்பாடுகள் குறித்த நீதிமன்ற தீர்ப்புகளுக்கு விரோதமாக செயல்படும் ஆளுநரின் செயல்களுக்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தனது அறிக்கையில் ஜவாஹிருல்லாஹ் தெரிவித்துள்ளார்.

பாபநாசம் இன்பம்