அரசியல் சாசனத்திற்கு விரோதமாக ஆளுநர் செயல்படுகிறார் அமைச்சர் துரை முருகன்
தமிழகம்

அரசியல் சாசனத்திற்கு விரோதமாக ஆளுநர் செயல்படுகிறார்
ஆளுநர் பதவிக்கு எதிராக இருந்தாலும், அந்த பதவி இருக்கும் வரை அதில் இருப்பவருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்பதே கலைஞரின் கொள்கை எனவும்
முந்தைய ஆண்டுகளைப் போல இம்முறையும் உரையை முழுமையாக படிக்காமல் ஆளுநர் சென்றுள்ளார் என துரை முருகன் கூறியுள்ளார்.
ஆளுநர் உரையின் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து, உரையின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு, கடந்த ஆண்டே ஆளுநருக்கு கடிதத்தில் தெளிவுபடுத்தியிருந்தார்.
ஆனால், இந்த ஆண்டும் அதே காரணத்தை கூறி ஆளுநர் வெளியேறியுள்ளார்
தேசிய கீதத்தின் மீதும், தேசிய ஒருமைப்பாட்டின் மீதும் தமிழ்நாடு மக்களும், அரசும் மாறாத பற்று கொண்டவர்கள் எனவும் அமைச்சர் துரை முருகன் பேசியுள்ளார்.