கீழ்வெங்கட்டாபுரம் கிராமத்தில் எருது விடும் விழா. !
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம், அருகே கீழ்வெங்கட்டாபுரம் கிராமத்தில்
நடைபெற்ற தமிழர்களின் பாரம்பரிய எருதுவிடும் விழாவில் 250 எருதுகள் பங்கேற்பு, குறிப்பிட்ட தூரத்தினை விரைவாக கடந்த எருதுகளுக்குப் பரிசு தொகை உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டது,
கிருஷ்ணகிரி மாவட்டம், பருகூர் ஒன்றியம், மல்லப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட கீழ்வெங்கட்டாபுரம் கிராமத்தில் தமிழர்களின் பாரம்பரியத்தினை பரைசாற்றும் விதமாக முதலாம்மாண்டு மாபெரும் கன்று விடும் திருவிழா நடைப்பெற்றது,
இவ்விழாவில் ஜெகதேவி, சந்தூர், போச்சம்பள்ளி, ஆலப்பட்டி,
பர்கூர், காளிகோவில், வேப்பனப்பள்ளி, குருநாயனப்பள்ளி வரட்டனப்பள்ளி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை இராயக்கோட்டை, பூவத்தி, சிக்கப்பூவத்தி, ஒசூர், என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 250 கன்றுகள் பங்கேற்றிருந்தன,
அரசின் வழிக்காட்டுதலின் படி நடத்தப்பட்ட இந்த கன்று விடும் விழாவில் கலந்துகொண்ட அனைத்து கன்றுகளும் வாடி வாசலுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் ஒவ்வெரு கன்றுகளாக விடப்பட்டது.
இதில்100 மீட்டர் தூரத்தை மிக குறைந்த நேரத்தில் விரைவாக கடந்த கன்றுகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருள்களும் வழங்கப்பட்டது. இந்த கன்று விடும் விழாவினை ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அவிழ்ந்து விடப்பட்ட கன்றுகளை இளைஞர்கள் தட்டி உற்சாகப்படுத்தினர்கள்.
இந்த கன்று விடும் விழாவினை, கீழ்வெங்கட்டாபுரம் ஊர்பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ