இன்ஸ்டாவில் பழகி 17 வயது பெண்ணை கர்பமாக்கிய 18 வயது இளைஞன் கைது.!

திருவண்ணாமலை

இன்ஸ்டாவில் பழகி 17 வயது பெண்ணை கர்பமாக்கிய 18 வயது இளைஞன் கைது.!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியில் 17 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் முதலாமாண்டு நர்சிங் படித்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது மாணவர் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் இந்த மாணவியை சந்தித்தார். இந்த மாணவர் அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் போது, ​​இன்ஸ்டாகிராம் மூலம் அந்த மாணவியுடன் பழக விருப்பம் தெரிவித்திருந்தார்.

அதன் பிறகு, மாணவர் அடிக்கடி நேரில் சந்தித்து வந்தார். பின்னர், திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து, அடிக்கடி தனிமையில் ஜாலியாக இருந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மாணவி மிகவும் பலவீனமாக இருந்ததால், அவரது பெற்றோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் வந்தவாசி மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தது. அந்த தகவலின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பந்தப்பட்ட மாணவனை கைது செய்தனர். மேலும், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.