மேலசெம்மங்குடி அருள்மிகு ஸ்ரீ படைதாங்கி விநாயகர் ஆலயம் குடமுழுக்கு விழா.!

பாபநாசம்

மேலசெம்மங்குடி அருள்மிகு ஸ்ரீ படைதாங்கி விநாயகர் ஆலயம் குடமுழுக்கு விழா.!

மேலசெம்மங்குடி அருள்மிகு ஸ்ரீ படைதாங்கி விநாயகர் ஆலயம்
குடமுழுக்கு விழா.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.

தஞ்சை மாவட்டம்,
பாபநாசம் தாலுக்கா, மேலசெம்மங்குடி   கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ படைதாங்கி விநாயகர்   ஆலயத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன், ஸ்ரீ பூர்ண ஸ்ரீ புஷ்கலாம்பிகா சமேத ஸ்ரீ அய்யனார், ஸ்ரீ வீரசேனா, ஸ்ரீ மதனசேனா சமேத ஸ்ரீ மணவாள சுவாமி, ஸ்ரீ சப்பானிகருப்பு, ஸ்ரீ ஸ்ரீ பிடாரிஅம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் ஆலயங்கள், கோயில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்ட நிலையில் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் தொடங்கின.

குடமுழுக்கு விழாவை முன்னிட்டு விக்னேஷ்வர பூஜையுடன் 
முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கி நான்கு கால யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்று மகா பூர்ணாஹூதி நடைபெற்றது.அதனை தொடர்ந்து மேள தாழங்கள் முழங்க கடம்புறப்பாடு, நடைபெற்றது.  

தொடர்ந்து விமான கலசம் மற்றும் மூலவர், பரிவார தெய்வங்களின் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு வெகு விமர்சையாக நடைபெற்றது.  

தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.  குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகளை மேலசெம்மங்குடி ஆலய திருப்பணி குழுவினர் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.

குடமுழுக்கு விழாவில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

செய்தியாளர்

பாபநாசம் இன்பம்

செய்திகள் மற்றும் விளம்பர தொடர்பிற்கு

97 87 41 64 86