பாபநாசத்தில் ஸ்ரீ சீனிவாச பத்மாவதி தாயார் திருக்கல்யாண உற்சவம்.
பாபநாசம்

பாபநாசத்தில் ஸ்ரீ சீனிவாச பத்மாவதி தாயார் திருக்கல்யாண உற்சவம்.!
திரளான பக்தர்கள் பங்கேற்பு!
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சிவசங்கீதம் திருமண மண்டபத்தில் ஸ்ரீ சீனிவாச பத்மாவதி தாயார் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு தோடய மங்கலம், குரு கீர்த்தனைகள், அஷ்டபதி ஆகிய பஜனை பாடல்கள் பாடப் பெற்றுதிவ்ய நாம சங்கீர்த்தனம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பெண்கள் மங்கல பொருட்களை சீர்வரிசையாக மேளதாளங்கள் முழங்க எடுத்து வந்தனர்.
தொடர்ந்து விஷ்வக்சேனர் பூஜை புண்ணிய வசனம் மாலை மாற்றுதல் எஜமானர் சங்கல்பம் கண்ணியாதானம் நடைபெற்ற பிறகு வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீ சீனிவாச பத்மாவதி தாயார் திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு மகா தீபாராதனையும் நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது.
திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். ஏற்பாடுகளை பாபநாசம் சிவசங்கீதம் பேலஸின் உரிமையாளர் சிவலிங்கம் மற்றும் குடும்பத்தினர் சங்கீதா சிவலிங்கம், ராகுல் ஆகியோர் செய்திருந்தனர்.
பாபநாசம் இன்பம்