தமிழக சிறைகளில் சிறை நீதிமன்றம் மூலமாக தகுதியுள்ள மற்றும் சிறு குற்றங்கள் மற்றும் முதல் குற்றம் புரிந்தவர்கள் விடுதலை .!
பாபநாசம்

தமிழகம் முழுவதும் உச்ச நீதிமன்ற ஆணைகிணங்க தமிழக சிறைகளில் சிறை நீதிமன்றம் மூலமாக தகுதியுள்ள மற்றும் சிறு குற்றங்கள் மற்றும் முதல் குற்றம் புரிந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
அதனை முன்னிட்டு பாபநாசம் கிளைச் சிறையில் நீதித்துறை நடுவர் அப்துல் கனி மூலம் ஒரு சிறைவாசி விடுதலை செய்யப்பட்டார்.
உடன் சிறை கண்காணிப்பாளர் திவான் துணைக் கண்காணிப்பாளர் ராஜமாணிக்கம் உட்பட பலரும் உடன் இருந்தனர்.
பாபநாசம் இன்பம்