எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்டத்தின் பொதுக்குழு கூட்டம்.!
தஞ்சாவூர்

மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை ஏஎன்பி மஹாலில் எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்டத்தின் பொதுக்குழு கொடியேற்றத்துடன் துவங்கியது.
தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முகமது ரஹீஸ் கொடியேற்றி மாவட்ட பொதுக்குழுவை துவக்கி வைத்தார்.
மாவட்ட பொதுக்குழுவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மற்றும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதித் தலைவர் அகமது அஸ்லம் வரவேற்புரை ஆற்ற, மாவட்டத் தலைவர் முகமது ரஹீஸ் தலைமை உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியை சேதுபாவாசத்திரம் ஒன்றிய தலைவர் ரியாஸ் அகமது தொகுத்து வழங்கினார்.
பொதுக்குழுவிற்கு சிறப்பு அழைப்பாளராக வருகை புரிந்த தஞ்சை மண்டலத் தலைவர் தப்ரே ஆலம் பாதுஷா சிறப்புரை வழங்கினார்.
மாவட்ட பொதுக்குழுவிற்கு தேர்தல் அதிகாரியாக வருகை புரிந்த கட்சியின் மாநில செயலாளர் இமாம் ஹஸ்ஸான் பைஜி தேர்தலை நடத்திய பிறகு அரசியல் பயிற்சி மற்றும் எழுச்சி உரை நிகழ்த்தினார்.
தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஷேக் தாவூத் 2022-2023 க்கான ஆண்டறிக்கை வாசித்தார்.
எஸ்டிபிஐ- கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத்தின் 2024-2027 அடுத்த மூன்று ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள்
மாவட்ட தலைவராக மல்லிப்பட்டினம் நிஜாமுதீன் , மாவட்ட துணைத் தலைவராக அகமது அஸ்லம்,மாவட்ட நிர்வாக பொதுச்செயலாளர் முஹம்மது புஹாரி, மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளராக அசாருதீன், மாவட்ட செயலாளர்களாக முகமது ரஹிஸ்,ரியாஸ் அகமது,மாவட்ட பொருளாளராக முஹம்மது அஸ்கர,மாவட்ட செயற்குழு உறுப்பினராக ஷேக் தாவூத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தஞ்சை தெற்கு மாவட்டத்தின் பொதுக்குழு தீர்மானம்.
1. மதுக்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் விளையாட்டு மைதானம் ஏற்படுத்த தமிழக அரசு கவனம் கொள்ள வேண்டும்.
2. தஞ்சை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, பேராவூரணி சட்டமன்றத் தொகுதி மற்றும் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வக்ஃபு சொத்துக்களை தமிழக அரசு பாதுகாத்திட வேண்டும்.
3. மல்லிபட்டினத்தில் 24 மணி நேரம் பொது நல மருத்துவம் மற்றும் மருத்துவ சுகாதார மையம் அமைக்க வேண்டும்.
4. சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்திருக்கும் பாலம் நீண்ட காலமாக சரிசெய்யாமல் இருப்பதால் அந்த பாலத்தை உடனடியாக தமிழக அரசு சரிசெய்ய வேண்டும்.
5. மதுக்கூர் நகரில் பெருகிவரும் போதை பொருட்களை (கஞ்சா&குட்கா) தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.
6. மதுக்கூரில் உள்ள நீர் நிலைகளை பாதுகாத்து அனைத்து குளங்களையும் பராமரிப்பு செய்ய வேண்டும்.
7மல்லிப்பட்டினம் ஷாஃபி இமாம் தெருவில் உள்ள குளம் பராமரிப்பற்ற நிலையில் உள்ளது. இதனால் தொற்று நோய்கள் பரவக்கூடும் வகையில் உள்ளது. இந்த குளத்தை உடனடியாக பராமரித்து அங்குள்ள மக்களை பாதுகாக்க வேண்டும்.
SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தஞ்சை தெற்கு மாவட்ட புதிய தலைவர் நிஜாமுதீன் ஏற்புரை வழங்கினார்.
இந்த பொதுக்குழுவில் எஸ்டிபிஐ-கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பட்டுக்கோட்டை தொகுதி நிர்வாகிகள் சேதுபாவாசத்திரம் ஒன்றிய நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், GP கமிட்டி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இறுதியாக தஞ்சை தெற்கு மாவட்ட புதிய நிர்வாக பொது செயலாளர் முஹம்மது புஹாரி நன்றியுரை ஆற்றினார்.